நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்: குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் எடுத்த ராசி பில்டர்ஸ் நிறுவனம்
சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு முதலமைச்சரின் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் தற்போது வழங்கப்பட…

சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு முதலமைச்சரின் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்காக அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகையை விட 32 சதவீதம் குறைவாகக் கேட்டு ராசி பில்டர்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இதன்படி, மொத்தம் 3.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அரசு நிர்ணயித்த தொகையை விட இவ்வளவு பெரிய சதவீதத்தில் குறைவான விலைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.