நவம்பர் 4 முதல் 8 முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம்: தெற்கு மத்திய ரயில்வே அறிவிப்பு
தெற்கு மத்திய ரயில்வே மண்டலம், தாங்கள் இயக்கும் முக்கியமான வழித்தடங்களில் உள்ள எட்டு எக்ஸ்பிரஸ் ரயில்களின் புறப்படும் மற்றும் வருகை நேரங்களை மாற்றி அமைத்துள்ளது. இதில் திருச்சி மற்றும் சபரி எக்ஸ்பிரஸ…

தெற்கு மத்திய ரயில்வே மண்டலம், தாங்கள் இயக்கும் முக்கியமான வழித்தடங்களில் உள்ள எட்டு எக்ஸ்பிரஸ் ரயில்களின் புறப்படும் மற்றும் வருகை நேரங்களை மாற்றி அமைத்துள்ளது. இதில் திருச்சி மற்றும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில்களும் அடங்கும்.
ரயில்வேயின் புதிய இயக்க அட்டவணையின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த புதிய கால அட்டவணை வரும் நவம்பர் 4-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
எனவே, பயணிகள் இந்த நேர மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, தங்கள் பயணத் திட்டங்களை அதற்கு ஏற்ப முன்னதாகவே மாற்றிக்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.