நேபாள வெள்ளம்: 97 வயது மூதாட்டி மீட்பு, உயிரிழந்தவர்களின் உடல்களைப் பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒன்பது மணி நேரம் வெள்ளத்தில் சிக்கியிருந்த 97 வயது மூதாட்டி ஒருவர் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளார். இடிபாடுகளுக…

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒன்பது மணி நேரம் வெள்ளத்தில் சிக்கியிருந்த 97 வயது மூதாட்டி ஒருவர் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளார். இடிபாடுகளுக்கு இடையே உயிருக்குப் போராடிய நிலையில், அதிசயம் நிகழ்ந்ததைப் போல அவர் பத்திரமாக மீட்கப்பட்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த இயற்கை பேரிடரில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் கடும் சிக்கல் நிலவுவதால், புதிய தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. உயிரிழந்தவர்களின் உடல்களில் டிஜிட்டல் டி.என்.ஏ மற்றும் கியூஆர் டேக் எனப்படும் குறியீடுகளைப் பொருத்தி, அவர்களைக் கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை 1.5 மீட்டர் ஆழத்தில், 40 செ.மீ இடைவெளியுடன் தனித்தனியாகப் புதைத்து, அவற்றை அடுத்த 12 ஆண்டுகளுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்க நேபாள அரசு முடிவெடுத்துள்ளது. முன்னதாக உடல்களை மொத்தமாகப் புதைக்க அரசு திட்டமிட்டிருந்ததற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நிகழ்ந்த இந்த பெருவெள்ளத்திற்கு இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளே காரணம் என்று நேபாள அரசு வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்த இயற்கை பேரிடருக்குக் காரணமான நாடுகளிடம் இருந்து இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் நேபாள அரசு வலியுறுத்தி வருகிறது.