செமிகான் 2.0 திட்டம்: 1.27 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில், 'செமிகான் 2.0' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் 1.27 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப…

இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில், 'செமிகான் 2.0' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் 1.27 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், நாட்டின் தொழில்நுட்பத் துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் சிப் வடிவமைப்பு, உற்பத்தி, பேக்கேஜிங், உபகரணங்கள், மூலப்பொருட்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய ஆறு முக்கிய துறைகளில் கவனம் செலுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நீண்ட கால வளர்ச்சியை உறுதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த முதலீட்டுத் திட்டத்தின் வாயிலாக சுமார் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.