விண்ணில் சீறிப்பாயத் தயாராகும் இஸ்ரோவின் EOS-05 செயற்கைக்கோள்: செப்டம்பர் 4-ல் ஏவுதல்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது மிகவும் லட்சியமிக்க திட்டமான EOS-05 என்ற அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த ஏவுதல் பணி ஆந்திர மாநிலம் ஸ்ர…

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது மிகவும் லட்சியமிக்க திட்டமான EOS-05 என்ற அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த ஏவுதல் பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து செப்டம்பர் 4-ம் தேதி அதிகாலை 2:55 மணிக்கு நடைபெற உள்ளது.
ஜிஎஸ்எல்வி-எஃப்17 (GSLV-F17) ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. பூமியிலிருந்து சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள புவி ஒத்திசைவு அல்லது புவிநிலை சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் இந்தியாவின் கண்காணிப்புத் திறனை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் விண்வெளியில் இருந்து இந்தியாவின் பகுதிகளை நேரடியாகக் கண்காணிக்கும் திறன் வலுப்படுத்தப்படுவதோடு, முதன்முறையாக இத்தகைய கண்காணிப்பு செயற்கைக்கோள் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.