வேளாங்கண்ணி பேராலயத்தில் நிலவும் சாதிய வழக்கங்கள் குறித்து விசிக எம்பி ரவிக்குமார் கேள்வி
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் சாதிய வழக்கங்கள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பழக்கவழக்கங்களை…

வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் சாதிய வழக்கங்கள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பழக்கவழக்கங்களை மாற்றுவதற்கு அமைச்சர் மரிய வில்சன் உரிய நடவடிக்கைகள் எடுப்பாரா என்று அவர் தனது வினாவை முன்வைத்துள்ளார்.
இத்தகைய சாதிய ரீதியான நடைமுறைகள் திருச்சபைகளில் இருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள ரவிக்குமார், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அதிக அளவில் கிறித்தவ மதத்திற்கு மாறாமல் இருப்பதற்கு இதுவே ஒரு முக்கிய காரணமாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார்.
#politics#editorial